செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

வாழ்க்கை

புரியாத வயதில் புரிந்ததாய் நினைத்து
புரிந்த செயல்களின் விளைவுகள் புரியும் வயதில் புரியும்போது,
ஏன் அப்போதே புரியவில்லை என்று
அல்லாடுவதும்,
காண மறுத்ததை கண்ட பிறகு
மறுத்ததை நினைத்து மருகுவதும்,
சொல்ல வேண்டியதை சொல்லாமல் விட்டபிறகு
மனதில் இருப்பதை மறைக்கப் பாடுபடுவதும்,
தேடியது கிடைத்தும் தொட முடியாத தூரத்தில் இருப்பதும்.......
மனதில் நிற்பது கண்ணீராய் வழிந்து ஓடுவதும்
கண்முன் நிற்பது கண்ணீருக்கு காரணமாக இருப்பதும் ....
வாழ்க்கை எப்போதும் உடலை வருடி
கடந்து சென்ற தென்றலைப் போல
சுகமாகவும் இருக்கிறது
காண முடியாததால் சுமையாகவும் இருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக